திருப்பூர், வே.தூயவன் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் திருப்பூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிச்சாமி சட்டமன்றத் தேர்த லுக்கு பிரச்சாரம் செய்தார். 10 ஆண் டுகால பாரதிய ஜனதா ஆட்சியை விமர்சிக்க துணியாத எடப்பாடி பழனிச்சாமி திமுகவை மட்டும் தாக்கிப் பேசினார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அரு ணாச்சலத்தை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி புதன்கிழமை பிரச் சாரம் செய்தார். அவரது உரையில் முழுக்க முழுக்க மாநில அரசை ஆளும் திமுகவை குறிவைத்து கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் நடப்பது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தபோதும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் பாரதிய ஜனதா கட் சியை குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ மறந்தும் வாய் திறக்க வில்லை. அதுவும் 2014ஆம் ஆண்டு தொடங்கி பாஜகவின் முதலாவது ஐந்தாண்டு கால ஆட்சியின்போது அதிமுகவின் 38 எம்பிக்கள் இருந் தும், தமிழகத்திற்கு என்ன செய் தார்கள் என்பது குறித்தும் அவர் எதுவும் சொல்லவில்லை. 2011ஆம் ஆண்டு சாயப்பட்டறை மூடல் பிரச் சனையில் தொடங்கி தற்போது வரை அடுத்தடுத்து தாக்குதலை சந்தித்து திருப்பூர் பின்னலாடை தொழில் கடும் நெருக்கடியில் தத்த ளித்து வருகிறது. அதுவும் குறிப் பாக 2014ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500, 1000 பணமதிப்பு நீக் கம் அறிவிப்பு, 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலாக்கம், அதைத் தொடர்ந்து பஞ்சு, நூல் விலை உயர்வு, கொரோனா பொது முடக்க காலத் தில் நெருக்கடியில் சிக்கிய சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்க ளுக்கு மத்திய அரசு கடன் உதவி செய்யாதது என அடுத்தடுத்த மோடி அரசின் தாக்குதலை திருப்பூர் சந்தித்து வந்தது. இத னால்தான் திருப்பூர் டாலர் சிட்டி “டல் சிட்டி” என்று மாறிப்போனது. பத்தாண்டு கால மோடி அர சின் நேரடி கொள்கை தாக்குதல் விளைவாகவே இந்த நிலையை சந்தித்து வருகிறது. இதைப்பற்றி வாய் திறக்காத எடப்பாடி, கடந்த மூன்று ஆண்டுகளாக பின்ன லாடை தொழில் நெருக்கடியில் சிக்கி இருப்பதாக மாநில அரசின் மீது அப்பட்டமாக திசை திருப்பி பொய் சொன்னார். “நாடாளுமன்ற உறுப்பினரின் கவனக்குறைவு காரணமாக நூல் விலை ஏற்றம் பெற்றுள்ளது, அதிமுக எம்பி நாடாளுமன்ற உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயமாக நூல் விலை கட்டுப்படுத் தப்படும்” என்றும் கூறினார். ஆனால் மேற்கு மாவட்டங்களில் ஜவுளி தொழில் மையங்களை சார்ந்த எம்பிக்கள் என்ற முறை யில் பி.ஆர்.நடராஜன், கே சுப்பரா யன், ஆ.கணேசமூர்த்தி ஜோதி மணி ஆகியோர் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது டன், நாடாளுமன்றத்திலும் பிரச் சினையை எழுப்பினர். இதையெல் லாம் தெரிந்தும் தெரியாதவராக இப்பகுதி எம்பிக்களை குறை சொன்ன எடப்பாடி பழனிச்சாமி, கோரிக்கையை நிறைவேற்ற மறுத்த மோடி அரசை பற்றி வாய் திறக்க துணியவில்லை. “அம்மா அவர்கள் சவால் விட்டு ஆட்சிக்கு வந்து மின் வெட்டை சரி செய்தார். மின் கட்டணத்தை உயர்த்தாமல் தொடர் மின்சா ரம் கொடுத்தோம்” என்றும் கூறி னார். ஜெயலலிதா உயிருடன் இருந் தவரை உதய் மின் திட்டத்தையும், மத்திய அரசின் உணவு பாதுகாப் புச் சட்டத்தையும் ஏற்கமாட்டேன் என்று உறுதியுடன் எதிர்ப்பு தெரி வித்தார்.
அதன் பிறகு முதல்வ ராக வந்த எடப்பாடி பழனிச்சாமி, மின்சாரத்தை முழுக்க முழுக்க தனி யாருக்கு தாரை வார்க்கும் மோச மான உதய் மின் திட்டத்தையும், அதன் காரணமாக மின் கட்ட ணத்தை தாறுமாறாக உயர்த்து வதற்கு வழி ஏற்படுத்தியதையும் பற்றி வாய் திறக்காமல் நயவஞ்ச கமாக கடந்து சென்றார். தொழில் இல்லை, வேலை இல்லை, வருமானம் இல்லை, விலைவாசி மட்டும் ஏறிவிட்டது என்று தற்போதைய நிலையை சொன்ன எடப்பாடி பழனிச்சாமி, அதற்குக் காரணமான பாஜக அரசின் கொள்கைகளைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. “தேர்தல் பத்திரத்தில் “ஒரு கட்சிக்கு” ரூ.6000 கோடி வந்துள்ளது, திமுகக்கு ரூ.656 கோடி வந்துள்ளது” என்று சொன்னபோது, அந்த ரூ.6000 கோடி வாங்கிய கட்சியின் பெயரை பாரதிய ஜனதா என்று சொல்லும் துணிவுகூட அவருக்கு இல்லை. இதன் மூலம், “பாஜகவின் பி டீம்” ஆக அதிமுக செயல்படுகிறது என்ற விமர்சனத்தை உண்மை என்று நிரூபித்தார். “அவிநாசி அத்திக்கடவு திட்டத் தின் 80 சதவீதம் முடித்தது. அதிமுக ஆட்சி அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை முழுமையாக நிறை வேற்றி அனைத்து குளம் குட்டை கள் நிரப்பப்படும். அதிமுக ஆட்சி வந்த உடன் இதனை நிச்சயமாக செய்து முடிக்கும்” என்று கூறினார். இப்போது நடைபெறுவது நாடா ளுமன்றத் தேர்தல், இதன் மூலம் அதிமுக எப்படி ஆட்சிக்கு வரும் என்று தெரியவில்லை முக்கியத்து வம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்த லில் கொள்கை பிரச்சனையை திசைதிருப்பி மூடி மறைப்பதன் மூலம் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கிறார் எடப்பாடி பழ னிச்சாமி என்பதை மீண்டும் ஒரு முறை திருப்பூரில் நிருபித்து சென் றார்.